யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை, கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகிய இருவரும் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை காலை அவர்களின் வீட்டுக்குச் சென்ற உறவினர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 50,51 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலீஸார் மற்றும் பொலீஸ் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலீஸாரால் பருத்தித்துறை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பருத்தித்துறைப் பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.