யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட சுயேச்சைக் குழுவின் வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா, மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வைத்தியர் அர்ச்சுனா மன்றில் முன்னிலையாக நிலையில் மன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
