ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி விகிதம் 13 சதவீதமாக அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்!

ஊழியர் சேமலாப நிதிக்கு வழங்கப்பட்டிருந்த 9 சதவீத வட்டி விகிதத்தை 13 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,

முன்னதாக ஊழியர் சேமலாப நிதிக்கு 9 சதவீத வட்டி விகிதமே வழங்கப்பட்டிருந்தது எனவும், எமது நாட்டில் ஊழியர் சேமலாப நிதியின் வைப்புத் தொகை மிகவும் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் 27 இலட்சம் உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாம நிதியின் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்து, அதில் ஈட்டிய பணத்தில் 9 சதவீதத்திற்கு பதிலாக 13 சதவீதத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.

இந்த வட்டி விகிதம் குறைந்தபட்ச விகிதமாக 9 வீதமே காணப்பட்டிருந்தது.

ஆனால் இன்று இதனை 13 சதவீதத்தை அதிகரித்திருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
அந்த நிதியின் முதலீடு உறுப்பினர்களுக்கே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!