அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ்-மோட்டார் சைக்கிள் – ஒருவர் மரணம்!

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில், பண்டுலகம பிரதேசத்தில் பயணித்த மோட்டார் கைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாமயடைந்த மற்றொரு நபர் அநுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!