நீதிமன்றத் தீர்ப்பையே நாட்டில் செயற்படுத்த முடியாத நிலைமை : அமைச்சர் வியாழேந்திரன்!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினையே இந்த நாட்டில் செயற்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தனபாசுந்தரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள்,பொலிஸ் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயரதிகளாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!