கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து மூன்று பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதனால் நீதிமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடங்கள் . பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் மதிய உணவுக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்படும் வரை, நீதிமன்றத்திற்கு வந்திருந்தவர்கள் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றி, சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பாடு செய்ததாகவும், மதிய உணவிற்குப் பிறகு, நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!