மாங்குளத்தில் அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்! மக்கள் அவதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான 1990 இலவச அம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக  மாங்குளம் பிரதேசத்தை அண்டிய பாண்டிய குளம், நட்டாங்கண்டல், மல்லாவி, கோட்டைக்கட்டிய குளம், அம்பலபெருமாள்குளம், அம்பகாமம், தட்சடம்பன், முள்ளியவளை,மற்றும் மணலாறு பகுதிகளில் உள்ள மக்களே  அம்புலன்ஸ் சேவையின்றி பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!