யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால், வீட்டில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி யாழ்ப்பாணம், புத்தூர் மேற்கு, வளர்மதி பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்
குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையிலேயே இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தினால், வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் முற்றாக அழிவடைந்துள்ளது.