பிள்ளைகள் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்போம்! ஜனாதிபதி தெரிவிப்பு

பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கும் அரசியல் பாதுகாப்பு இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தங்காலை பொது மைதானத்தில் இன்று இடம்பெற்ற ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய திட்டத்தின் தென் மாகாண வேலைத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!