கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளன. தெய்வாதீனமாகக் குறித்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் , யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துந்தொன்று, அறிவியல் நகர் பல்கலைக்கழகப் பணியாளர்களை இறக்கிவிட்டுத் திரும்பிய வேளை புகையிரத்த்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து, அதன் பின்னால் தரித்து நின்ற யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதியின் கப் ரக வாகனத்தை மோதித் தள்ளியதால், கப் ரக வாகனம் கடுமையான சேதத்துக்குள்ளாகியது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.