செயலிழந்த கப்பலின் பணியாளர்கள் துறைமுகததிற்கு வந்தடைந்தனர்

இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று 26ஆம் திகதி காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் MV INTEGRITY STAR வணிகக் கப்பலின் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து, ஆபத்தில் இருப்பதாக கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த அறிவிப்பின் பேரில், இலங்கை கடற்படையினர், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், அந்தக் கடல் பகுதியில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படைக் கப்பலான INS சமுதுரவை அனுப்பியது.

இந்திய, துருக்கிய மற்றும் அஜர்பைஜான் நாட்டினரைக் கொண்ட பாதிக்கப்பட்ட MV INTEGRITY STAR வணிகக் கப்பலின் 14 பணியாளர்கள், சமுதுர கப்பலால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின் இன்று 26ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

மேலும், ஒரு தீவு நாடாக இலங்கையின் சர்வதேச கடமைகளுக்கு இணங்க, கடலில் ஆபத்தில் உள்ள கப்பல்கள் மற்றும் கப்பல்களில் கடல்சார் சமூகத்தின் உயிர்களை மீட்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர், கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இலங்கையைச் சேர்ந்த கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திலும், சர்வதேச நீரில் அருகிலுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயங்களிலும் துன்பத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்திற்குத் தேவையான நிவாரணங்களை வழங்க தொடர்ந்து தயாராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!