ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர், ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின் விகாராதிபதியாவார். அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகப் பணியாற்றும் அவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.
நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் தெனிகே ஆனந்த தேரர், கரகஸ்வெவ ஆனந்த தேரர், விதாரந்தெனியே நந்த தேரர் ஆகிய பிக்குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர். நியமனக் கடிதத்தை வழங்கிய பின்னர், மகா சங்கத்தினருடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.