கொழும்பு ஹைலெவல் வீதியில் விபத்து : தந்தை மகன் பலி – தாய் படுகாயம்

கொழும்பு ஹைலெவல் வீதியில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்;, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து கொழும்பு ஹைலெவல் வீதியில் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்றிரவு (8)இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய தந்தையும் 8 வயதுடைய மகனும் ஆவர்.

கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென வெடித்ததில், லொறி வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!