நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இணைக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கா நாடாளுமன்றப் பணியாளர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் விபரக் கொத்தக்காகத் தன்னால் சமர்ப்பிக்கப்படாத விவரங்களை நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் வாக்குமூலம் பெறுவதற்காகக் கடந்த மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளும் நாடாளுமன்றத்துக்குச் சென்று, அங்குள்ள சில அதிகாரிகளிடமும் இது தொடர்பில் வாக்குமூலம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.