யாழ். இந்தியத் துணைத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சிநேகபூர்வ சந்திப்பு!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்து சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷும் பங்கேற்றிருந்தார்.

ஆளுநர் மற்றும் துணைத்தூதுவர் இருவரும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு வடக்கு மக்கள் சார்பில் ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். புதிய ஆண்டில் இந்திய அரசாங்கத்திடமிருந்து எவ்வாறான உதவிகள் தேவை என்பது தொடர்பில் துணைத் தூதுவர் ஆளுநரிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!