இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படும் வகையில் புதிய தளபதிகள் நியமக்கப்பட்டுள்ளனர்.
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும், புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று, திங்கட்கழமை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
தற்போது பதவியிலுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் நாளை தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.