முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்புப் புத்தகத்தில் பதிவொன்றை இட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் 2024 டிசம்பர் 26ம் திகதி முதல் 2025 ஜனவரி மாதம் 01ம் திகதி வரையான 7 தினங்களுக்கு இந்தியாவில் அரச துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதற்கிணைவாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலும் 2024 டிசம்பர் 30 (இன்று) முதல் 2025 ஜனவரி 01ம் திகதி வரை இரங்கல் குறிப்பு புத்தகமொன்று வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.