பலாங்கொடையில் குழு மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை – பெட்டிகலவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு குழுக்கள் இடையே நிலவிய முரண்பாட்டின் விளைவாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!