கொழும்புக்கு வந்த சுற்றுலாக்கப்பல்!

குயின் விக்டோரியா சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்துள்ளது

சிங்கப்பூரில் இருந்து இன்றுகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி பிரித்தானியா அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 812 பயணிகளும் 964 பணியாளர்களும் குறித்த கப்பலில் வருகைதந்துள்ளனர்.

நாட்டிற்கு வருகைதந்துள்ள குறித்த சுற்றுலா பயணிகள் காலி கண்டி பின்னவல ஆகியஇடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள குயின் விக்டோரியா சொகுசு கப்பல் இன்று இரவு மொரிஷியஸ் நோக்கி பயணிக்கவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!