இளவாலையில் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இளவாலை வசந்தபுரம் பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் நேற்று இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குடும்பத்தகராறு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் தமது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து தனியாக வசித்துவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!