ஆப்கானில் கடும் பனிப்புயல்: 15 பேர் உயிரிழப்பு : கலிபோர்னியாவில் பனிப்புயல் உருவாகும் அபாயம்

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பனிப்பொழிவினால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சியரா நெவாடா பகுதியில் பெரும் பனிப்புயல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக யோசெமிட்டி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தப் பகுதிகளில் 10 அடி வரை பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!