தலைக் கவசம் அணியாததால் இளைஞன் உயிரிழப்பு; கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தலைக்கவசமின்றி வேகமாக மோட்டார் சைக்கிளைச்  செலுத்தி சென்ற வேளை, வேக கட்டுப்பாட்டை இழந்து, மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளானதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!