தலைக்கவசத்தில் வைத்து ஐஸ் போதை பொருள் கடத்திய இளைஞன் கைது!

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் ஹெல்மட்டினுல் சூட்சமமான முறையில் ஐஸ் போதை பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையினான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
விடத்தல் தீவு பகுதியில் இருந்து R15 ரஹ மேட்டார் சைக்கிளில் வருகை தந்த குறித்த இளைஞன் தலைகவசத்தின் உட்பகுதியினும் சூட்சமமான முறையில் 20 கிராம் 850 மில்லிகிராமம் ஐஸ் போதை பொருளை மறைத்து வைத்திருந்த நிலையின் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!