மிருகக் காட்சிச்சாலையின் வருமானம் அதிகரிப்பு!

தெஹிவளை தேசிய மிருகக் காட்சிச்சாலையானது புத்தாண்டின் மூன்று நாட்களில் 13, 14, 15 ஆம் திகதிகளில் 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடுவ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு விடுமுறையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் மிருகக்காட்சிச்சாலைக்கு வருகை தந்ததாக அவர் தெரிவித்தார்

அதன்படி கடந்த 13ஆம் திகதி 13 இலட்சம் ரூபாவும், 14ஆம் திகதி 16 இலட்சம் ரூபாவும், 15ஆம் திகதி 18 இலட்சம் ரூபாவும் வருமானமாகப் பெற்றுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!