ரின் இலக்கம் குறித்த விசேட அறிவிப்பு!

”தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” இந்த நடைமுறை மூலம் தெளிவான தரவு அமைப்பொன்றை உருவாக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!