இலங்கையில் இன்புளுவன்சா ஏ மற்றும் பி நோய்கள் வேகமாகப் பரவி வருவதால், குழந்தைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேல் இருமல், காய்ச்சல் அல்லது சளி தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகளுடன் உள்ள தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் பகல் நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோய்களின் அறிகுறிகள் இருப்பவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமருத்துவர் தீபால் பெரேரா இது குறித்து விரிவான சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் .