யாழ்ப்பாணம், புத்தூர் – நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலையால் பதற்ற நிலை ஏற்பட்டது. எனனும், பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளது.
நேற்று இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் காவற் கடமையில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அது அகற்றப்பட்டது.