கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
எட்டு மாடிகளைக் கொண்ட இந்தப் புதிய வெளிநோயாளர் பிரிவு 49,150 சதுர மீட்டர்களைக் கொண்டுள்ளது. கதிரியக்க பிரிவு, புற்றுநோய்ப் பிரிவு, அறுவை சிகிச்சை மையம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிலையம், வெளி நோயாளர் அறுவை சிகிச்சை நிலையம், ஆய்வுக்கூடங்கள் உட்படப் பல சிகிச்சை நிலையங்கள் இந்த வெளிநோயாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன.