“ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் நாட்டின் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்துவிடும்-மம்தா பானர்ஜி

ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள பின்னனியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நிலை மாறியது

இந்த சூழ்நிலையில், மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பெயரில் தேர்தலை நடத்தினால் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!