அரசுக்கெதிராக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மின்சாரம், நீர், சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களின் விலைகளை உயர்த்தி மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டியடிக்கவும், தேர்தலை வென்றெடுக்கவும் என இந்தப் போராட்டம் நடாத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!