வரி வசூலிப்புக்கு எதிராக யாழ். பல்கலையில் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணியவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அநீதியான வரி விதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி” போன்ற பதாகைகளை ஏந்தியாவாறு விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!