நாட்டில் விசேட நடவடிக்கையின் போது 841 பேர் கைது!

நாட்டில் பொலிஸாரினால் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நேற்று 841 ஆண் சந்தேக நபர்களும் 21 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 57 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு ,05 சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு போதைப்பொருளுக்கு அடிமையாகிய 10 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஹெரோயின் 142 கிராம் , ஐஸ் போதைப் பொருள் 97 கிராம் , கஞ்சா 395 கிராம் போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் தென் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போதும் 76 ஆண் சந்தேக நபர்களும் , 3 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!