பொம்மைவெளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு

யாழ்- பொம்மைவெளி பகுதியில் இன்று 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது.

இதனை அடுத்து தாயும், மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் எதிர்திசையில் பயணித்த டிரக்டர் ஒன்று மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!