மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கல்கந்த விகாரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்தமையால் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி மூதூர் பகுதியில் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வருவதால் மீட்புப் பணிகள் வான்வழி ஊடாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான 309 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று 30ஆம் திகதி உடைந்ததால், அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன்படி, இன்று 1ஆம் திகதி காலை வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மூதூர் கல்கந்த விகாரை வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடற்படைக்குச் சொந்தமான படகுடன் கடலோர ரோந்துப் படகு என்பன மூதூர் பிரதேசத்தை அண்மித்த கடல் பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!