மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு

கேகாலை, மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலீப் நிஷாந்த தெரிவித்தார்.

மேலும் இரண்டு பேரை உயிருடன் மீட்க இராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், நேற்று இரவு வீடு திரும்பிய நான்கு பேர் மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!