இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 55 வயதுடைய கெய்ட்லின் ஜூலி கிளார்க் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி இருந்ததாகவும், அவர் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று அவர் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பியுள்ளர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பெண் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என்று பொலிஸார் விசாரணையில் சந்தேகிக்கின்றனர்.
பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனையின் இன்று சடலம் அனுப்பப்பட்டுள்ளதோடு, கண்டி சுற்றுலா பொலிஸ் துறையின் பொறுப்பதிகாரி சிஐ லலித் மகாக்தர விசாரணைகளை முன்னேடுத்துள்ளார்.
