யாழ், மணியந்தோட்டம் பகுதியில் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று 30ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைதானவர்கள் 24 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
