உயிர் கொல்லும் போதைப்பொருட்களை அழித்து ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு உதவும் வகையில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘1818’ என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலம், நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ் தொலைபேசி இலகத்திற்கு அழைத்து மக்கள் முறைப்படுகளை அளிக்க முடியும் எனவும் இவ்வாறான தகவல் வழங்கும் செய்யற்படுகள் மூலம் போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்க முயல்வோம்.
