யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் செம்ணிக்காக போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதைக் காட்டும் முகமாக இன்று 30ஆம் திகதி செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு உண்மையான நீதி கிடைக்கப்பெற்று மக்களின் கண்ணீருக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தின் வாயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக செம்மணிச் சந்திவரை சென்று உயிர்நீத்த உறவுகளின் அஞ்சலிக்காக செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு தூபியடியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் பேராயர்கள், கிறிஸ்தவ மதகுருக்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!