நாடளாவிய ரீதியில் 955 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் கீழ் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 633 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவு பட்டியலில் இருந்த 322 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குற்றப் பிரிவு பட்டியலில் இருந்த 322 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 42 சந்தேக நபர்களும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 243 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது அவர்களிடம் இருந்து 187 கிராம் ஹெராயின், 126 கிராம் ஐ.ஸ் 14 கிலோ 700 கிராம் கஞ்சா, 148 கிராம் மாவா 136 போதை மாத்திரைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!