இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான சீன கே – 08 பயிற்சி விமானம் ஒன்று வாரியப்பொல பகுதியில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ரேடார் தொடர்பை இழந்ததை அடுத்து விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமானப்படை கருத்து தெரிவிக்கையில், விபத்தின் போது விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி தரையிறங்கியுள்ளனர் எனவும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை,என்பதுடன் இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
