அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு பெண் வைத்தியர் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கல்நேவ பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியரிடம் இருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள் தொடர்கின்றன.