தேசபந்து தென்னகோனுக்குப் பகிரங்கப் பிடியாணை!

கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கண்ட இடத்தில் கைது செய்யும் அதிகாரம் பொலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை இந்த விவகாரம் தொடர்பாக, இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றைத் செய்து, சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியது.

வெலிகம பெலேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன், பத்து இடங்களில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடுதலாக, மேலும் 18 இடங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!