உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் !

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இடம்பெற்றது.

உயிர் நீத்த உறவுகளை நினைவேந்தி பொதுச்சுடரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார் . தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,  உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் , உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!