மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான, ஆர். பி. ஹெட்டியாராச்சி மற்றும் கே. எம். எஸ். திசாநாயக்க ஆகியோரே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.