சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது!

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வந்த அவர், வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பேராயர் அதிமேதகு கர்தினால் ரஞ்சித்தை அவதூறு செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவு ஒன்று பரப்பப்பட்டமை தொடர்பிலேயே நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!