இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமது டிப்போவில் இடம்பெறும் நிர்வாக முறைகேடுகளுக்குத் தீர்வு கோரிய இவ்வூழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிப்போவில் இடம்பெறும் நிர்வாக ரீதியான பிரச்சனைகளை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்காமையால் தாம் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.