நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலையானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி கொழும்பு – பேஸ்லைன் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்னுமொரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகனச் சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகாமல் தொடர்ந்தும் விசாரணைகளைத் தவிர்த்து வந்ததனால் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.