சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 43,682 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் யாழ். மாவட்டத்தில் 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனர்த்த விபரங்கள் குறித்து இரவு 7.30 மணிக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி , 12 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும், மாவட்டத்தில் 66 இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!