சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் யாழ். மாவட்டத்தில் 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்த விபரங்கள் குறித்து இரவு 7.30 மணிக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி , 12 ஆயிரத்து 970 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் 129 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும், மாவட்டத்தில் 66 இடைத்தங்கல் முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 793 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.