காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் படங்களையும், பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், தமது உறவுகளுக்கு நீதி வேண்டிக் கோசங்களையும் எழுப்பினர்.